அரூர் பகுதியில் மழை
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டா-ரத்தில் நேற்று காலை முதலே, வானம் மேக-மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 2:45 மணிக்கு அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.