அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா வழங்க கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த குருபரஹள்ளி கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், 92 பேருக்கு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் கடந்த, 1989ல் இல-வச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. அதில் பெரும்பாலானோர் வீடுகள் கட்டி வசிக்கின்றனர். ஆனால் யாருக்கும் பட்டா வழங்-கப்படாமல் இருந்தது. கடந்த, சில மாதங்களுக்கு முன்பு வருவாய் துறை அதிகாரிகள் நேரடியாக கிராமத்தில் ஆய்வு செய்-தனர். இதில், 92 பேரில், 45 பேருக்கு மட்டும் வீட்டு மனை பட்டா வழங்கி, 47 பேருக்கு வழங்கவில்லை. இதுகுறித்து பல-முறை அதிகாரிகளிடம் கேட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இது குறித்து, அக் கிராமத்தை சேர்ந்த மணிவேல் கூறு-கையில்,''கடந்த, 35 ஆண்டுகளாக அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசிக்கிறோம். ஆனால், சிலருக்கு மட்டும் வீட்டு-மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களுக்கு வழங்-கவில்லை. பட்டா கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடி-யாக நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,'' என்றார்.