உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போலீஸ் குடியிருப்பு சீரமைக்க கோரிக்கை

போலீஸ் குடியிருப்பு சீரமைக்க கோரிக்கை

கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில், போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில், ஸ்டேஷனில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் உள்ளிட்டோர் வசிக்க ஆங்கிலேயர் காலத்தில், குடியிருப்புகள் கட்டப்பட்டன. நாளடைவில் குடியிருப்புகள் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதை அகற்றி விட்டு புதிதாக போலீஸ் குடியிருப்பை கட்டினால், ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, போலீஸ் குடியிருப்பு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை