மேலும் செய்திகள்
சொத்து தகராறு மாமியார் கழுத்தை அறுத்த மருமகன்
23-Sep-2024
மாயமான மூதாட்டிகிணற்றில் சடலமாக மீட்புபாப்பிரெட்டிப்பட்டி, அக். 11---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி கண்ணம்மாள், 80. வேடியப்பன் கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கண்ணம்மாள் அவரது விவசாய தோட்டத்தில் தனியாக வசித்து வந்தார். கடந்த, ஓராண்டுக்கு முன்பு இரு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தோட்டத்தில் தனியாக இருந்த கண்ணம்மாவிற்கு, தினமும் அவரது மகன் சரவணன் உணவு கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல வந்தபோது, தாய் இல்லாததால், தேடினார். இந்நிலையில், அன்று மாலை தேசிங்கு என்பவரின் கிணற்றில் கண்ணம்மாள் இறந்து கிடந்தது தெரியவந்தது. புகார் படி ஏ.பள்ளிப்பட்டி போலீசார் மூதாட்டி உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
23-Sep-2024