உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / துணிக்கடை கூரையை உடைத்து ரூ.1.95 லட்சம் திருட்டு

துணிக்கடை கூரையை உடைத்து ரூ.1.95 லட்சம் திருட்டு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்த முருகன், 39. இவர் தர்மபுரி ஆறுமுக ஆச்சாரி தெருவில், துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 3 அன்று இரவு, 11:00 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை, 9:30 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது, கடையின், 3வது மாடியிலுள்ள கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், தரை தளத்தின் கல்லாவில் இருந்த, 1.95 லட்சம் ரூபாயை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து முருகன் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ