உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்துள்ள செங்கனுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.பள்ளி மேலாண்மை குழு தலைவி கங்கா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பழனி, பள்ளி மேலாண்மை குழு மேற்-கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசியதாவது; 8 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு, ஆதார் புதுப்பித்தலுக்கான சேவை கட்டணம் நவ., 1 முதல் ஓராண்டு காலத்திற்கு இல்லை. திறன் திட்டத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம் எளிமை-யாக கற்றுக்கொள்வது, இல்லம் தேடி கல்வி, புதிய பாரத எழுத்த-றிவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிகளில் செயல்ப-டுத்தப்பட்டு வரும் மன்ற செயல்பாடுகள், வடகிழக்கு பருவம-ழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ-டிக்கை, சுற்றுப்புற சுத்தம், டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்பு-ணர்வு உள்ளிட்டவை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.இவ்வாறு பேசினார்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி