கழிவுநீர் கால்வாய் பணி
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., பழைய பேட்டையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. டவுன் பஞ்., துணைத் தலைவர் தனபால் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் பெருமாள், ராணி மனோகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.