உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தமிழ்நாடு பசுமை இயக்க மரக்கன்று நடும் விழா

தமிழ்நாடு பசுமை இயக்க மரக்கன்று நடும் விழா

பென்னாகரம், தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் சார்பில் பசுமை இயக்க தினத்தையொட்டி, நேற்று தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், சீலநாயக்கனுார் காப்புக்காட்டில் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவில் முக்கியத்துவமாக, நாவல் மரக்கன்றுகள் ஏராளமாக நடப்பட்டன. வேம்பு புங்கன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. விழாவில் பேசிய பென்னாகரம் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் நாவல் மரத்தின் நன்மைகள் குறித்தும், அதை அதிகமாக நடப்படுவதின் அவசியம் குறித்தும் பேசினார். விழாவில், சீலநாயக்கனுார் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், பள்ளி மாணவர்கள், மகாதேவி தொண்டு நிறுவன ஊழியர்கள் சீலநாயக்கனுார் வனக் குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்சியில் வனவர் புகழேந்தி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை