உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவிலில் அம்மன் தாலி காணிக்கை பணம் திருட்டு

கோவிலில் அம்மன் தாலி காணிக்கை பணம் திருட்டு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் செக்போஸ்ட் அருகே, ஞான லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று காலை வழக்கம்போல், கோவிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி மோகன் அதிர்ச்சியடைந்தார். கோவில் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்திலிருந்த, ஒன்னேகால் பவுன் தாலி மற்றும் உண்டியல் பணம், 40,000 ரூபாய் மற்றும் பூஜை பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. பூசாரி மோகன் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை