உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.4.69 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.4.69 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

தர்மபுரி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில், தர்மபுரி விற்பனைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில், விவசாயிகள் விளைவித்த பொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது.நேற்று முன்தினம் நடந்த மஞ்சள் ஏலத்தில், அதிகபட்சமாக, ஒரு குவிண்டால் பனங்காளி மஞ்சள், 20,000 ரூபாய், விரலி, 13,100 ரூபாய், உருண்டை, 11,847 ரூபாய் என, ஏலம் போனது. இதில், 21 விவசாயிகள், 38.59 குவிண்டால் மஞ்சள் மொத்தம், 4.69 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை