மயான வசதி செய்து தர கிராம மக்கள் கோரிக்கை
அரூர்: அரூர் அடுத்த கோபிசெட்டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட, பாப்பிசெட்டிப்பட்டியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லா-ததால், இறந்தவர்களின் உடல்களை, அரூர் - கடத்துார் சாலை-யோரத்தில், அடக்கம் செய்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே அடக்கம் செய்த இடத்தில், மீண்டும் சடலங்-களை அடக்கம் செய்யும் நிலையுள்ளது. மயான வசதி கோரி, இப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்-கப்படவில்லை. இங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கு இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.