மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 28,000 கன அடியாக சரிவு
08-Jul-2025
ஒகேனக்கல் :ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 18,000 கன அடியாக சரிந்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து, அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியாற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 18,000 கன அடியாக சரிந்தது. இருப்பினும், அங்குள்ள ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின் அருவி, மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.நீர்வரத்து சரிந்ததால், சுற்றுலா பயணிகள் காவிரியாற்றில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.
08-Jul-2025