உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் ரம்யமான சீதோஷ்ணம்: குவிந்த பயணிகள்

கொடையில் ரம்யமான சீதோஷ்ணம்: குவிந்த பயணிகள்

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் ரம்யமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.கொடைக்கானலில் இரு வாரங்களாக வறண்ட வானிலை நீடித்த நிலையில் சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நகரில் தரையிரங்கும் மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று மதியம் சிறிது நேரம் சாரல் மழை பெய்ய காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை