போதையில் தொழிலாளி குத்திக்கொலை
திண்டுக்கல்:மதுபோதையில், கட்டடத் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், குளிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 45. இவரது நண்பர் பாறைப்பட்டியைச் சேர்ந்த ரவி, 40; கட்டடத் தொழிலாளிகளான இருவரும் சேர்ந்து மது குடிப்பர். நேற்று காலை வழக்கம்போல் மது குடித்து, கோடாங்கிபட்டி அருகே ரோட்டில் நடந்து வந்தபோது, அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவி கத்தியால் குத்தியதில், வெங்கடேஷ் இறந்தார். ரவியை போலீசார் கைது செய்தனர்.