சிறுமலையில் காட்டு தீ
திண்டுக்கல்: சிவராத்திரியை முன்னிட்டு திண்டுக்கல்லில் சிறுமலை வெள்ளிமலை சுவாமி கோயிலில் பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது இரவு நேரத்தில் வெள்ளிமலை கோயில் அருகே தீ விபத்து ஏற்பட்டது. பக்தர்கள் ஒன்று கூடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இதில் ஒன்றரை ஏக்கரில் இருந்த கோரை புற்கள் தீயில் எரிந்தது.