| ADDED : ஆக 21, 2024 08:27 AM
திண்டுக்கல் : மாநில அளவிலனா தடகளப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பிட் இந்தியா , ரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு வென்றனர். 10,11 வகுப்பு மாணவர்கள் பிரிவில் மாணவர் சண்முகவேல் 100, 200 மீட்டர் போட்டியில் 2ம் இடம், மாணவர் விஜய் 100 மீட்டர் போட்டியில் 2ம் இடம், 12ம் வகுப்பு பிரிவில் 100 மீட்டரில் ரஞ்சிதா, 200 மீட்டரில் வித்யா 2 ம் இடம் பெற்றனர். 100 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவிலும் 2ம் இடம் பெற்றனர். தலைமையாசிரியை நிர்மலா, உதவித் தலைமையாசிரியை நாகஜோதி ,காஜா மைதீன் ,உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ரூபி, போஸ், சந்திரா பாராட்டினர்.