மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
02-Aug-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவாசக முற்றோதல், தேவார பாராயணத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது.கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.* தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, பஜன், விளக்குப் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
02-Aug-2024