பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள்
கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. -சண்முகம்,கொடைக்கானல். தடுக்கப்படும்
தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.-சத்தியநாதன், நகராட்சி கமிஷனர்,கொடைக்கானல். ரோட்டில் குப்பை
பழநி திருவள்ளுவர் ரோட்டில் குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.-ராஜேஸ்,பழநி. தீர்வு காணப்படும்
நகராட்சியில் குப்பை லாரிகள் பற்றாக்குறை உள்ளது. விரைவில் குப்பை தேங்காமல் தடுக்கப்படும்.-செபாஸ்டின்,கவுன்சிலர்,பழநி. தேவை குடிநீர் இணைப்பு
சாணார்பட்டி ஊராட்சி கோணப்பட்டி வடக்கு தெரு குடியிருப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.-வேல்முருகன்,கோணப்பட்டி. நடவடிக்கை எடுக்கப்படும்
வடக்கு தெரு குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.-கருப்பையா, ஊராட்சி செயலர்,சாணார்பட்டி. சேதமான ரோடு
குளத்துார் அரசம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் வளைவு பகுதியில் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் கவிழும் ஆபத்து உள்ளது.-கண்ணன், குளத்துார். சீரமைக்கப்படும்
சீரமைப்பு பணி செய்ய ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.-மோகன்தாஸ், ஊராட்சி செயலாளர், குளத்துார். ஆற்றில் கழிவுகள்
வேடசந்துார் நகரின் மையப் பகுதியில் செல்லும் குடகனாற்றில் இரவு நேரங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆர்.அழகுசுந்தரம்,வேடசந்துார். தீர்வு காணப்படும்
குடகனாற்றில் குப்பைகொட்டுவதை கண்காணித்து வருகிறோம். அதையும் மீறி யாரும் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.-மேகலா,பேரூராட்சி தலைவர், வேடசந்துார். சேதமான ரோடுகள்
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் குழாய்களுக்காக சேதப்படுத்தப்பட்ட ரோடுகள் அப்படியே உள்ளன. இதை சீரமைக்க வேண்டும்.-கதிரேசன் ஒட்டன்சத்திரம். சீரமைக்கப்படும்
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் குழாய்கள் அமைக்க சேதப்படுத்தப்பட்ட ரோடுகள் குழாய் அமைக்கும் பணிகள் முடிந்தபின் சீரமைக்கப்படும்.-திருமலைசாமி,நகராட்சி தலைவர்,ஒட்டன்சத்திரம். தெருவிளக்கு தேவை
கன்னிவாடி அச்சாம்பட்டி மெயின் ரோட்டிலிருந்து சோமலிங்கபுரம் செல்லும் வழியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை.-அ.சுவாமிநாதன், கன்னிவாடி. அமைக்கப்படும்
இப்பகுதியில் தேவைக்கேற்ப கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.-மணிமாலா,பேரூராட்சி கவுன்சிலர், சின்னாளபட்டி.