மேலும் செய்திகள்
விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
22-Aug-2024
வடமதுரை : வடமதுரை புத்துாரில் ஸ்ரீமுடிமலைஆண்டி, பெரியக்காண்டியம்மன், கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை மகா கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் தண்டாயுதம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, வீராசாமிநாதன், நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் பங்கேற்றனர். ஏராளமான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
22-Aug-2024