ஆவிச்சிபட்டி சர்ச் விழாவில் தேர்பவனி
நத்தம் : நத்தம் அருகே ஆவிச்சிபட்டி புனித அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா செப். 6ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாதிரியார்கள் தலைமையில் நவநாள் திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர் பவனி நடந்தது. நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டதை தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது. நத்தம், ஆவிச்சிபட்டி, ஊராளிபட்டி சுற்று பகுதியினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆவிச்சிபட்டி கிறிஸ்தவ பொதுமக்கள் செய்திருந்தனர்