உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரம் விழுந்து 7 பேர் காயம்

மரம் விழுந்து 7 பேர் காயம்

திண்டுக்கல்; திண்டுக்கல் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு நர்சிங் கல்லுாரி மாணவிகள் விடுதிகள் உள்ளன. நேற்று மதியம் 12:30 மணிக்கு மாணவிகளை பார்க்க வந்த உறவினர்கள் வளாக மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த கொன்றை மரம் விழுந்ததில் மதுரை வாடிப்பட்டி அழகர்சாமி 65, முத்தழகுபட்டி முருகபாண்டி 50, பிரமிளா 10, பிரான்சிஸ் சேவியர் 40, ஹெலன்35, கொட்டப்பட்டி பயிற்சி மாணவி கீர்த்தனா 20, பொன்மாந்துறை வேளாங்கண்ணி 30, காயமடைந்தனர். அழகர்சாமிக்கு கால் முறிந்தது. அமைச்சர் பெரியசாமி, வழக்கறிஞர்கள், தீயணைப்புதுறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !