உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பொன்னிமலை அருகே யானை கூட்டம்

பொன்னிமலை அருகே யானை கூட்டம்

ஆயக்குடி: பழநி பொன்னிமலை சித்தர் கரடு, அய்யங்குளம் அருகே விளை நிலத்தில் புகுந்த யானை கூட்டம் மா மரங்களை சேதப்படுத்தியது.பழநி பொன்னிமலை சித்தர் கரடு , அய்யன்குளம் அருகே விளை நிலங்கள் உள்ளன. அவற்றில் மா,தென்னை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. மாந் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானைகள் மா மரங்களை சேதப்படுத்தியது. யானைகள் அடிக்கடி இப்பகுதியில் விளைப் பொருட்களை சேதம் செய்வதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது . வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ