உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாரி மோதி சாய்ந்த மின் கம்பம்

லாரி மோதி சாய்ந்த மின் கம்பம்

வேடசந்துார் : தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் இருந்து வந்த லாரி வேடசந்துார் வழியாக சென்றது. நாமக்கல் மாவட்டம் செவ்வந்திபட்டியை சேர்ந்த பிரதீப் 34, ஓட்டி வந்தார். காக்காத்தோப்பூர் பிரிவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரம் உயர் மின் கோபுர விளக்கு கம்பத்தின் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் நொறுங்கியது. மின் விளக்கு கம்பம் லாரியின் மீது விழுந்தது. வேடசந்துார் எஸ்.ஐ., அருண்நாராயணன் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை