உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீயில் எரிந்த அ.தி.மு.க., ஆபீஸ்

தீயில் எரிந்த அ.தி.மு.க., ஆபீஸ்

எரியோடு: எரியோட்டில் சீனிவாசன் காலி இடத்தில் வாடகை அடிப்படையில் தற்காலிக தென்னக்கீற்று கூரையுடன் அ.தி.மு.க., நகர அலுவலகம் இயங்கி வந்தது. இதன் ஒரு பகுதியில் அறை போன்ற அமைப்பை உருவாக்கி கட்சி சார்ந்த பொருட்களை இருப்பு வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பற்றிய தீயில் பொருட்கள், கூரை என அனைத்தும் தீக்கிரையானது. எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி