வில் வித்தையில் சாதித்த அக் ஷயா பள்ளி
ஒட்டன்சத்திரம்: திறந்த நிலை மாநில அளவிலான 2025 ம் ஆண்டிற்கான வில்வித்தை போட்டி ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் லோட்டஸ் விளையாட்டு முகாம் சார்பில் நடந்தது. ஒட்டன்சத்திரம் அக் ஷய அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்று மாநில அளவில் வெற்றியாளர் பட்டம் வென்று சாதித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களை தாளாளர் சுந்தராம்பாள், நிர்வாகி புருஷோத்தமன், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா, ஆசிரியர்கள் வாழ்த்தினர்.