உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வியாபாரியிடம் திருட்டு; மேலும் ஒருவர் கைது

வியாபாரியிடம் திருட்டு; மேலும் ஒருவர் கைது

நத்தம்; நத்தம் அருகே பரளி- தேத்தாம்பட்டியை சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜாங்கம் 31. இவர் கடந்த ஜூலை 17- ல் பைக்கில் வத்திபட்டிக்கு சென்ற போது பேட்டைக்குளம் பகுதியில் 3 பேர் வழி மறித்து அவரிடம் 2 பவுன் செயின் மற்றும் 10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். லிங்கவாடியை சேர்ந்த மாதேஷ் 20 என்பவர் ஏற்கனவே நத்தம் போலீசார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பரளிபுதூரை சேர்ந்த வீரணன் 21 நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ