பாராட்டு விழா
திண்டுக்கல்:சித்தையன்கோட்டை வித்ய சிக் ஷா பள்ளி சார்பில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் முத்துக்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதோடு வெற்றிக்கு காரணமான முதல்வர் சுதா, ஆசிரியர்களை பாராட்டினார்.