உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடனமாடியதில் மோதல்; கைது

நடனமாடியதில் மோதல்; கைது

திண்டுக்கல் : சீலப்பாடி ஏ.டி.காலனி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுல் 18. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டுருகே உள்ள காளியம்மன் கோயில் முன்பாக நண்பர்களுடன் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினார். மைக்செட் அமைத்து சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவ்வழியே வந்த ஆனந்தகுமார் 19, கார்த்திக் 24, அறிவானந்தன் 23, ராஜா 24, 17 வயது சிறுவன் கோயில் முன்பாக ஆடக்கூடாது, மைக்செட்டை நிறுத்த கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், கார்த்திக் நண்பர்களுடன் இரும்புக்கம்பியால் கோகுலை தாக்கினர். தாலுகா போலீசார் ஆனந்தகுமார், கார்த்திக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை