உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா வியாபாரிக்கு பிடிவாரன்ட்

கஞ்சா வியாபாரிக்கு பிடிவாரன்ட்

பழநி: பழநி நெய்காரப்பட்டி பெரியகாளையம்புத்துார் காளி 55. இவரிடம் ஒட்டன்சத்திரம்-பழநி ரோடு விருப்பாச்சி சந்தை அருகில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் 2006 ல் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வழக்கு விசாரணை மதுரை இனக்கலவர தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா, காளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். ஜாமினில் சென்ற காளி தீர்ப்பளிக்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். காளிக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ