உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி நவராத்திரி திருவிழாவில் நாளை நடக்கிறது அம்புஎய்தல் மதியம் 3:00 மணி முதல் கோயில் நடை அடைப்பு

பழநி நவராத்திரி திருவிழாவில் நாளை நடக்கிறது அம்புஎய்தல் மதியம் 3:00 மணி முதல் கோயில் நடை அடைப்பு

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் நாளை (அக்.1) -அம்பு எய்தல் நடக்கும் நிலையில் மதியம் 3:00 மணிக்கு முருகன் கோயில் நடை அடைக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா செப்.22 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாளை (அக் .1) விழா நிறைவடையும் நிலையில் பழநி முருகன் கோயில் செல்லும் பக்தர்கள் காலை 11:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை , மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை பின் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடைகிறது. இதையொட்டி மதியம் 3:00 மணிக்கு முருகன் கோயில் நடை அடைக்கப்படுகிறது. தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் முத்துக்குமாரசுவாமி கோதை மங்கலம் கோடீஸ்வரர் கோயில் முன்பு வன்னிகாசூரன் வதத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைய வேல் முருகன் கோயில் செல்கிறது. அங்கு அர்த்த சாம பூஜை நடைபெற, நாளை மறுநாள் (அக்.2) பழநி முருகன் கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நவராத்திரி விழாவை முன்னிட்டு நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு அக்.2 முதல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை