அறுபடை வீடு பக்தர்கள் வருகை
பழநி: ஹிந்து அறநிலை துறை சார்பில் அறுபடைவீடு ஆன்மிக சுற்றுப்பயண பக்தர்கள் பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர். சென்னையில் உள்ள இரண்டு மண்டலங்களை சேர்ந்த பக்தர்கள் 200 பேர் ஆக. 26 ல் அறுபடை வீடு சுவாமி தரிசன பயணத்தை துவங்கினர். திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்தபின் பழநி வந்தனர். சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் திருச்செந்துார் சென்றனர். ஆக.29ல் திருச்சி சுவாமி மலைக்கு தரிசனம் செய்ய சென்னை செல் கின்றனர்.