உள்ளூர் செய்திகள்

அஷ்டமி வழிபாடு

ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் கிழக்கு நோக்கிய காலபைரவர் சன்னதியில் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மஞ்சள் பட்டு, விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவர், மூலவரை தரிசனம் செய்தனர்.சின்னாளபட்டி மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் தொப்பம்பட்டி திருவேங்கடமுடையான் கோயிலில் அஷ்டமி சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை