உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் அஷ்டமி வழிபாடு

கோயில்களில் அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், திருப்பூர், ஈரோடு கரூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில், பழநி ரோடு பத்ரகாளியம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மிளகு ,தேங்காய், வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை