உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரம் விழுந்து நொறுங்கிய ஆட்டோ: தப்பிய டிரைவர்

மரம் விழுந்து நொறுங்கிய ஆட்டோ: தப்பிய டிரைவர்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஆட்டோ நொறுங்கியது. பலத்த காயங்களுடன் டிரைவர் உயிர் தப்பினார். ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் 48. ஒட்டன்சத்திரம் பழநி ரோடு அரசு பஸ்டெப்போ எதிரில் ஆட்டோவை நிறுத்தி அதில் உட்கார்ந்திருந்தார். மரம் சரிந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோக்குள் இருந்த ஜெயராஜ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !