உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்

பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ்

பழநி : பழநி கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு பேட்டரி பஸ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள், கிரிவீதியில் பயணிக்க இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார், பஸ் இயக்கப்படுகிறது. தற்போது 11 பேர் அமரக்கூடிய 18 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் 1, 23 பேர் அமரக்கூடிய 15 பேட்டரி பஸ்,என 34மின் வாகனங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் பூவாத்தாள் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்ஸை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் 35 வாகனங்கள் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை