திண்டுக்கல்லில் புறவழிச்சாலை
செம்பட்டி அருகே ஆத்தூர் கூட்டுறவு கலைக்கல்லுாரி கட்டடத்தை ஆய்வு செய்த அமைச்சர் வேலு பேசுகையில், '' பழநி, ஒட்டன்சத்திரத்தில் தலா ரூ. 70 கோடி, கொடைக்கானலில் ரூ. 5.39 கோடியில் நவீன அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகரில் நெரிசலை குறைக்க 17 கிலோமீட்டர் புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு நிலம் எடுப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளன, பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ. 68 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது '' என்றார். அமைச்சர்கள்பெரியசாமி, சக்கரபாணி பங்கேற்றனர்.