உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெயிலை சமாளிக்க கொடையில் முகாம்

வெயிலை சமாளிக்க கொடையில் முகாம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தரைப்பகுதியில் நிலவும் சுட்டெரிக்கும் வெயி லை சமாளிக்க குளு குளு நகரான கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் விரும்பு கின்றனர். இங்கு நேற்று காலை முதல் வெயில் பளிச்சிட்டு இதமான சூழல் இருந்தது. மதியத்திற்கு பின் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.இதையடுத்து பயணிகள் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, வனச் சுற்றுலாத்தலம், கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தை ரசித்தனர். தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்தனர். இங்குள்ள அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை