சி.ஐ.டி.யு., கண்டனம்
திண்டுக்கல்: சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் கணேசன், செயலர் ஜெயசீலன் அறிக்கை: துாய்மை காவலர்களை கவுரப்படுத்துகிறோம், ஊக்கத்தொகை வழங்குகிறோம் என நீண்ட நேரம் அமர வைத்து கண்ணியகுறைவாக நடத்தியதற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட குழு சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு துாய்மை காவலர்களிடம் கலெக்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.