உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் மழையால் தரையிறங்கிய மேக கூட்டம்

கொடையில் மழையால் தரையிறங்கிய மேக கூட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தரையிறங்கிய மேக கூட்டத்தால் ரம்யமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.கொடைக்கானலில் 3 தினங்களாக தொடர் மழை பெய்தது. இதனால் நகர் சில்லிட்டது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பின் அவ்வப்போது தரை இறங்கிய மேக கூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !