இணைப்பு ரோடுகள் மூடல்
வேடசந்தூர்: திண்டுக்கல் கரூர் நான்கு வழிச்சாலையில் ரெங்கநாதபுரம் அருகே தொடர் விபத்து காரணமாக இணைப்பு ரோடுகள் மூடப்பட்டன. இந்த ரோட்டில் ரெங்கநாதபுரம் அருகே தொலைதுார பஸ்கள் நின்று செல்லும் வகையில் உணவு விடுதி, பெட்ரோல் பங்க் செயல்பாட்டில் உள்ளது. இங்கு இரு இடங்களில் இணைப்பு ரோடு உள்ளது. இதில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் நிலையில் 20 க்கும் மேற்பட்ட மக்கள் விபத்தில் இறந்தனர். இைத தொடர்ந்து இணைப்பு ரோடுகளை மூட பொதுமக்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து இரு இணைப்பு ரோடுகளும் மூடப்பட்டன.