மாற்றுத்திறனாளி முகாம் அறிவிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல், 3ம் செவ்வாய் கிழமைகளில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, வெள்ளி தோறும் பழநி மருத்துவமனை, மாதந்தோறும் கடைசி வியாழனன்று கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளளது.