தேர்தல் பார்வையாளர் ஆய்வு
வத்தலக்குண்டு: நிலக்கோட்டை தொகுதியில் பொது தேர்தல் பார்வையாளர் அம்ரித் திரிபாதி கள ஆய்வு செய்தார். பதட்டமான ஓட்டு சாவடி,ஓட்டு பதிவு குறைவாக நடக்கும் இடங்களை பார்வையிட்டார். வத்தலக்குண்டு முதல் வார்டு பள்ளி மையத்தில் தேர்தல் நடைமுறை, சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்து அலுவலர்களிடம் விசாரணை செய்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள், பொதுமக்களிடம் சட்டவிரோத மது விற்பனை, அரசியல் கட்சிகள் விதி மீறல் உள்ளதா என கேட்டறிந்தார்.