கொடை பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை
கொடைக்கானல்:கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிக்கை: பேரிஜம் ஏரிப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.