/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு பின்பும் பூத்துக்குலுங்கும் பூக்கள்
பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு பின்பும் பூத்துக்குலுங்கும் பூக்கள்
கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர்கண்காட்சி நிறைவுற்ற பிறகும் ப லட்சக்கணக்கான மலர்கள் அழகுற பூத்த குலுங்குவதை பயணிகள் கண்டு ரசித்தனர்.கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி 9 நாள் நடந்தது.இதன் பின்னும் இங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்கேற்ப இங்குள்ள மலர் படுகைகளில் அஸ்ட்ரோ மேரியா, சால்வியா, அமெரிக்கன் மேரி கோல்டு, காஸ்மாஸ், ஆண்ட்ரினா, பேன்சி டேலியா, ரோஜா உள்ளிட்ட மலர்கள் அழகுற பூத்துள்ளன. சீசன் நிறைவடைந்த பின்னரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்களின் வசீகரத்தை ரசித்தனர். குறிப்பாக கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள அரியவகை பூக்களை புகைப்படம் எடுத்து தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.