அரசு பஸ் டூ வீலரில் மோதி பலி
வத்தலக்குண்டு: பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது ரியாஜ் 22. இவர் நண்பர் முகமது நவாபுல் உடன் வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் டூ வீலரில் வந்தனர். பயணியர் விடுதி அருகே வந்தபோது திருப்பூரிலிருந்து தேனி சென்ற அரசு பஸ் மோதியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய முகமது ரியாஜ் பலியானார். முகமது நவாபுல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வத்தலக் குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.