துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.ஐ., க்கு இறுதி மரியாதை
வேடசந்துார்: மாரம்பாடி பெருமாள்கோவில் பட்டியை சேர்ந்தவர் வேடசந்துார் சிறப்பு எஸ்.ஐ., பாலன் 54. நேற்று முன்தினம் பணிக்கு வந்தபோது, தலை சுற்றல் ஏற்பட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். எஸ்.பி., பிரதீப், மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். டி.எஸ்.பி., பவித்ரா, இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஞான திரவியம், எஸ்.ஐ., தர்மேந்திரன் அஞ்சலி செலுத்தினர். போலீசாரின் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.