மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் : உயர வளர்ச்சி தடைபட்டோருக்கான சிறப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும், மாதாந்திர உதவித்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், கேலி செய்வதை தடுக்க விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்,பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். செயலாளர் பகத்சிங், பொருளாளர் காளீஸ்வரி பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.