கொடைக்கானலில் சாரல் மழை
கொடைக்கானல்:கொடைக்கானல், தாண்டிக்குடியில் சில தினங்களாக சுட்டெரிக்கும் வெயில் நீடித்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பனிமூட்டம் நிலவியது.தொடர்ந்து மதியம் வரை சாரல் மழை பெய்தது. பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மதியத்திற்கு பின் இயல்புநிலை திரும்பியது.