உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  உண்ணாவிரத போராட்டம்

 உண்ணாவிரத போராட்டம்

திண்டுக்கல்: ''மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 2.5 சதவீதம் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும்.'', என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றக் கோரி தமிழக அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வேளாங்கண்ணி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பத்மநாபன், அருள்செல்வம் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் மேரி பிரிட்டில் பாய், மாவட்ட இணைச் செயலர் மசபியேல் ஆசி பேசினர். இதில் நிர்வாகிகள் சகாயராஜ், மரிய இஞ்ஞாசி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை