உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டம் முழுவதும் கள்ள மது விற்பனை தாராளம்; சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு வாய்ப்பு

மாவட்டம் முழுவதும் கள்ள மது விற்பனை தாராளம்; சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு வாய்ப்பு

மாவட்டத்தில் டாஸ்மாக் சார்பில் ஏலம் விடப்பட்ட கடைகளுடன் ஏலம் எடுக்கப்படாத பார்கள் உள்ளிட்ட அனுமதி பெறாத விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இதோடு கிராமங்களில் டாஸ்மாக் கள்ள மது விற்பனை தாராளமாக நடக்கிறது. மதுப்பழக்கம் கிராமங்களில் அதிகரித்து உள்ளதால் உறவினர்களுக்கு இடையே பிரச்னைகள்,விசேஷ வீடுகளில் தகராறு ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருகிறது.பல கிராமங்களில் பெண்களில் கள்ள மது விற்பனை கூடங்களை பெண்களே அடித்து நொறுக்கி வருகின்றனர். பெண்கள் போராட்டம்பின் ஓரிரு நாட்கள் விட்டுவிட்டு அடுத்த சில தினங்களில் கள்ள மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது.டாஸ்மார்க் நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. மது ஒழிப்பு போலீசாரும் கிராமங்களுக்கு வருவதில்லை. நகர் பகுதியில் டாஸ்மாக் செயல்படும் பகுதியில் மட்டும் பெயரளவிற்கு ஆய்வினை நடத்தி சென்றுவிடுகின்றனர். கள்ள மது விற்பனையை கிராமங்களில் இருந்து அறவே ஒழித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ravi
ஜூலை 10, 2025 07:43

இதில் எதுவுமே இங்கு மாறப் போவதில்லை


என்றும் இந்தியன்
ஜூலை 09, 2025 16:45

கள்ள மது விற்றால் என்ன???? நல்ல மது விற்றால் என்ன???மக்கள் நாசமடைவது உறுதி தானே??மது விற்பனையின் முக்கிய நோக்கம் பணம் பண்ணுவது மட்டும் தான் மக்களின் நலன் அல்லவே அல்ல


shyamnats
ஜூலை 09, 2025 08:16

இதில் என்ன கள்ள மது , நல்ல மது ? விரைவில் மதுவே ஒழிக்க பட வேண்டும். பெண்களும், மாணவர் சமுதாயமும் கூட மது பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டனர். தமிழகம் வளர்ச்சி பாதையில் திரும்ப வேண்டும் என்றால் பூரண மது விலக்கு தேவை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை